வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.
கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். (கும்மி)
மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி)
நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! (கும்மி)
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம். (கும்மி)
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி! (கும்மி)
ஒருவரது முகம் அவரது மனதை பிரதிபளிக்கும். ஒருவரது முக மாறுதல்களை வைத்தே அவரது மனதின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.
உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக வாய்ப்பு இருப்பதால் அடிக்கடி ஏதும் பிரச்சனை வருவதையும் அன்றாடம் நாம் காணலாம்.
மேலோட்டமாக உழுவதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கு செழிப்பு.
அதுபோல், நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், மேலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அடி - திருவடி (இறைவனின் திருவடி)
இறைவனின் திருவடியைச் சரணடைந்தால், அத்திருவடி நம்மைக் காப்பதுபோல் அண்ணன் தம்பி கூட காக்கமாட்டார்கள்.
குறிப்பு:
'அடி' என்பதை 'அடி உதை' என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டு, அடி உதை உதவுவதைப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று தவறாக கையாளப்படுகிறது.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
காய்த்த மரம் தான் கல் அடிபடும்.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
"குருவிக்கு தக்க ராமேசுவரம்" என்று தவறாகக் கூறப்பட்டு, பொருள் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கெடுவான் கேடு நினைப்பான்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று தவறாக கூறப்பட்டு, பொருள் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.
தருமம் தலைகாக்கும்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.