வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவி யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்திந்மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
ஒருவரது முகம் அவரது மனதை பிரதிபளிக்கும். ஒருவரது முக மாறுதல்களை வைத்தே அவரது மனதின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.
உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக வாய்ப்பு இருப்பதால் அடிக்கடி ஏதும் பிரச்சனை வருவதையும் அன்றாடம் நாம் காணலாம்.
மேலோட்டமாக உழுவதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கு செழிப்பு.
அதுபோல், நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், மேலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.
இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அடி - திருவடி (இறைவனின் திருவடி)
இறைவனின் திருவடியைச் சரணடைந்தால், அத்திருவடி நம்மைக் காப்பதுபோல் அண்ணன் தம்பி கூட காக்கமாட்டார்கள்.
குறிப்பு:
'அடி' என்பதை 'அடி உதை' என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டு, அடி உதை உதவுவதைப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று தவறாக கையாளப்படுகிறது.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
காய்த்த மரம் தான் கல் அடிபடும்.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
"குருவிக்கு தக்க ராமேசுவரம்" என்று தவறாகக் கூறப்பட்டு, பொருள் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கெடுவான் கேடு நினைப்பான்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று தவறாக கூறப்பட்டு, பொருள் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.
தருமம் தலைகாக்கும்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.